எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 நவம்பர், 2016

தரிசனம்

சூரியனைப் போல

வருவதும் போவதுமாயிருக்கிறாய்.

என் கவனம்தான்

பிசகிப் பிசகிப் போகிறது.


சில நேரம் ஜன்னலிலும்,

சில நேரம் மரக்கிளை ஊடேயுமாக

வந்து செல்கிறது உன் தரிசனம்.


அவ்வப்போது என் விழிகளிலும்

நிலவாய்ப் பிரதிபலிக்கிறது

உன் சூர்யப்பார்வை.


இருவரும் அற்ற தருணங்களில்

நட்சத்திரங்களாய்

மின்னிக் கொண்டிருக்கிறது நினைவு.


4 கருத்துகள்:

Kasthuri Rengan சொன்னது…

அருமை தொடர்க

KILLERGEE Devakottai சொன்னது…

இரசித்தேன் சகோ வாழ்த்துகள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மது

நன்றி கில்லர்ஜி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...