எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 நவம்பர், 2016

நீர்க்காதல்.

மழையைப் பார்த்ததில்லை
வாசல் மூடி வசிக்கும் சிலர்
அவள் கோபத்தை தாபத்தை
முனகலை சிணுங்கலை

குழந்தையாய்க் குமரியாய்க்
காதலியாய்க் கனிந்தவளாய்
வீடு சுற்றி ஆடுமவள்
நடனம் கண்டதில்லை

முகம் மூடிச்செல்லும்
மனிதர்களைத் தவிர
மிச்சமுள்ள எல்லாவற்றையும்
தழுவிச் செல்கிறாளவள்.

குடை விரித்துத் தடைவிரித்துக்
கடந்து செல்வோருக்குச் சொல்ல
எந்த ரகசியமுமில்லை அவளிடம்.

அவள் முணுமுணுப்பை
உற்றுக் கேட்போருக்குச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
ஜீவரசம் ததும்பும் தன் நீர்க்காதலை.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...