எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2016

யாமத்தின் கானகம்.

மழைப்பொறி பறந்து
வெள்ளத்தீயில்
விட்டில்களாய் மனிதர்கள்.

****************************

முத்தமிடத் துடிக்கிறது கடல்
அலை இதழ்களை மலர்த்தி.
கல்லிலிருந்து வெடித்துத்
துடிக்கிறது தேரை இதயம்.
இரண்டின் நோவும் நொடியும்
வேறு வேறல்ல.
இருந்தும் இரண்டும் ஒன்றல்ல.

********************************

பகலின் அரவங்களுக்குள் 
ஒளிந்த சுயம் 
யாமத்தின் கானகத்தில் 
பேரோலி எழுப்புகிறது.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...