எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 செப்டம்பர், 2016

உள்ளங்கைக்குள் ஓவியம்.

மரக்கிளையிலிருந்து மிதந்து
மடிசேர்ந்த அதைக்
கவனமாகப் பற்றினேன்.
மெத்தென்ற தன்மை
அது இருந்த இடத்தின்
மென்மையைச் சொன்னது.
வெதுவெதுப்பு அதன்
உயிர்த்துடிப்படங்காததை உணர்த்தியது.
கவனமின்மையாலோ
வேண்டாததாலோ வெறுப்பாலோ
காலம் தீர்ந்ததாலோ,
களையப்பட்ட அது
களைத்தும் கிடந்தது.
வடக்கும் கிழக்கும்
மேற்கும் தெற்கும்
மேலும் கீழும் ஒன்றுதான்.
போதும் பறந்தது என்று
பிசிறடித்துக் கிடந்தது
என் உள்ளங்கைக்குள்
ஓவியமாய் ஒரு இறகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...