எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 செப்டம்பர், 2016

கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி...

கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி...

வழியெங்கும் மரக் குழல்கள் அசைய ஜிகு புகு ஜிகு புகு என ஓடத்துவங்கும் ரயிலுடன் எப்போதும் சிறுமியாக்கி ஓடத்துவங்குகிறது மனசு.

எட்டிப் பார்க்கும் நிலா கூட ஓடி வர நதியிலும் கால்வாயிலும் விழுந்து எழுந்து தடுமாறுகிறது.

பன்னீர்ப் பூவோ காட்டு அரளியோ நாசியை நெருட மயக்கத் துவங்கும் இருளில் மேகக் கோலமிடுகிறது வானம்.

கண்ணாடி ஜன்னல்வழி ஒரு துளி பூமியும் ஒரு துளி வானமும் கொடுக்க மறுப்பதில்லை எந்த ரயிலும்.

புகையடிக்க ஓடிவந்த ஆதி ரயில் என்னை மயக்கிய அழகான ராட்சசன். இன்றுவரை அந்த மயக்கம் தீராமல் என்னைத் தாலாட்டித் தூங்கவைக்கிறான். காணும் கணம்தோறும் கண்விரித்து வியக்கவைக்கிறான்.

மீளாக் காதல் ஒரு ஏழு வயதிலிருந்து..

காசியிலிருந்து அப்பத்தாவின் அஸ்தியைக் கரைத்துத் திரும்பிய அம்மா அப்பா எங்களை ஸ்டேஷனில் சந்தித்துவிட்டு ராமேஸ்வரம் கிளம்ப அவர்களைத் திரும்பக் காணும் ஆவலில் காரைக்குடி ரயிலடிக்கு ஓட்டமும் நடையுமாக தனியாய்த் தைரியமாய்ப் போனபோது வழியில் பார்த்த யாரோ ஒரு அண்ணன் சைக்கிளில் சென்று திரும்பச் சந்தித்து திரும்பி ஆயாவீட்டிற்கு வந்து வாங்கிய அன்பு டோஸ் மறக்கமுடியாதது.

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி.. ரயிலே உன்மீது.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...