எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 ஜூலை, 2016

துரும்புப்புல் :-



துரும்புப்புல் :-

கரிய நீர்வீழ்ச்சியொன்று அலையாடுகின்றது
மீன்களைப் போலப் பேன்கள் நீந்திக்கிடக்கின்றன.
கூந்தல் அலைகளைப் போலாகிறேன்.

கரிய நீர்வீழ்ச்சியொன்று கட்டிப்போடுகின்றது
மீன்களைப் போலக் கண்கள் துள்ளிக் குதிக்கின்றன.
கண்களின் கட்டவிழ்க்கத் துடிக்கிறேன்

கரிய நீர்வீழ்ச்சியொன்று கடந்துபோகின்றது
வளைவும் நெளிவும் கொண்ட காட்டாறாய்ப் பாய்கிறது
கரியவளிடமிருந்து தப்பவழியின்றி மூழ்குகிறேன்

கரிய நீர்வீழ்ச்சியொன்று கண்ணாமூச்சியாடுகின்றது
எங்கே எங்கேயெனத் துரும்புப்புல் பூக்கிறது.
செல்லரித்த இரும்பாய் சுயம்கரைந்து போகிறேன்.

-- 85 ஆம் வுடைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...