எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஜூன், 2016

கானலுக்கும் தாகமுண்டோ ?



கானலுக்கும் தாகமுண்டோ ?

என்னுள்ளே இனம்புரியாக் குழப்பம்.
என்னை எனக்கே தெரியவில்லை.
என் மனதை என்னாலே
அறிந்துகொள்ள முடியவில்லை.
கண்ணெதிரே கல்லுக் குண்டாட்டம்
நீ நிற்கையில்
நீ மனம் பூத்துப்போய்க்
காத்திருக்கையில்
கிணற்று நீரை ஆற்று வெள்ளத்தால்
என்ன செய்துவிட முடியுமென்ற
எண்ணம் தலைவிரித்து
ஆடுகின்றது.
நீ சென்றவுடன்
ஆன்மாவைக் கொன்றுவிட்ட
உயிர்போல்
கிடந்து துடிதுடிக்கின்றது.
ஒருவேளை
நான் ரொம்பச் சின்னப்
பெண் மாதிரி பிஹேவ்
பண்ணுகிறேனோ ?
ஸ்கூல் கேர்ள் மாதிரி
அர்த்தமில்லாமல்
பிடிவாதம் பிடிக்கின்றேனோ ?
நான் அவசரப்படுகின்றேனோ ?
நான் ஒரு பைத்தியக் காரியோ ?
நான் பரபரவென்று உன்னை
ஆக்கிரமிப்பது உனக்குப்
பிடிக்கவில்லையா ?
அளவுக்கு மீறி எதிர்பார்க்கின்றேனோ
என்னுடைய இந்தத் தவிப்பு
உன்னைச் சங்கடப்படுத்துகின்றதா டியர்
நான் ரொம்ப
அலைபாய்கிறேனோ டியர்
இந்த வயதில்
இதெல்லாம் அர்த்தமுள்ளதா ?
அன்பு நட்பு பாசம் எல்லாம் ?
இது சாசுவதமானதா >
இல்லை நாளானபின்பு
சலித்து வெறுத்து விடுமா ?
உன்னுடைய துணை துணிவு
உறுதியானதுதானா
நட்டாற்றில் கைவிட்டுவிட
மாட்டாயே ? சாரி டியர்.
இந்தக் காலத்தில் தண்ணீர்ப்
பஞ்சத்தில் ஆறுகளில் மட்டும்
தண்ணீர் இருக்குமா !
ஆனாலும் நீ என்னைக்
கொடும்பாலையில்
கடும் வெய்யிலில்
தவிக்கவிட்டுவிடாதே 
உன் உறுதிமொழிகள்தான்
எனக்கு உணவாக ஆகின்றன.
விடையை என்னுள்ளே
புதைத்துவிட்டுக்
கேள்விகளை மட்டும்
உன்னிடமே தேடிக்கொண்டு இருக்கின்றேனோ ?
உன் நிலையில் நானிருந்தால்
என்ன செய்திருப்பேன்
என்று விளங்கவில்லை.
இருந்தாலும் உன்னைப் போலக்
கல்லாகிவிடமாட்டேன் டியர்.
உன் கேள்விகள் என்னை
வேதனைக்கு உள்ளாக்குமென வேதனைப்படாதே !
ஏனெனில் நான் எதற்கும்
துணிந்துவிட்டேன்
உன் மௌனத் தவத்தைத்
தகர்த்து எறிந்துவிட்டு
என்னை உரிமையுடன்
இரண்டு வார்த்தையாவது திட்டேன்.

-- 85 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...