எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 ஜூன், 2016

உன்னிடம் ஒரு வார்த்தை. :_



உன்னிடம் ஒரு வார்த்தை. :_

நீயொரு பிடிவாதக்காரி !
உன்னிடம் எனக்குப் பிடித்ததே
உன்னுடைய அந்தப் பிடிவாதம்தான்.
நீயொரு அகம்பாவக்காரி !
உன்னை எனக்குப் பிடிக்க
வைத்ததற்குப் பெருங்காரணம்
அந்த அகம்பாவம்தான்.
உன் பிடிவாதத்தை என்று நீ
விட்டுக் கொடுக்கின்றாயோ
அன்றுதான் நீ நல்லவளாவாய்.
உனக்கு என்னுடைய தூய
அன்பைவிட
உன்னுடைய அந்தப்
பாழாய்ப் போன
பிடிவாதமும்
அகம்பாவமும்தான்
முக்கியம்.
நீ என் கல்லறைக்கு
என்றாவது ஒருநாள்
வர நேர்ந்தால்
அங்கு கொட்டிக் கிடக்கும்
பூக்கள் கூறும் கவிதை,
இங்கும் இன்றும்
நீ வருவாயென
இவள் உன்னை எதிர்பார்த்தே
ஏமாந்தே காத்து இருக்கிறாள்.
இன்னும் காத்திருப்பாள்
என்பதாகத்தானிருக்கும். 

-- 84 ஆம் வருட டைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...