எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 ஜூன், 2016

வேஷங்கள் கலையும் நேரம் :-



வேஷங்கள் கலையும் நேரம் :-

வேஷங்கள் கலையும் நேரம்
பாசத்தை அழுத்தும் பாரம்.

நட்புக் காலங்கள்
நழுவி ஓடுகின்றன.
நட்புக்குப் பிரிவேது ?
நேரம் வந்துவிட்டதோ ?
பிரியத்தான் வேண்டுமோ ?
நாடகத்தில் காட்சிகள்
முடிந்துவிட்டன.
ஆனால்
நான் எதிர்ப்பார்த்த முடிவில்
சுபம் இல்லையே !
இந்துக்களின் நம்பிக்கையின்படி
பரமாத்துமாக்கள்
மறு அவதாரம் எடுத்துக்
கொண்டேயிருக்கின்றன.
ஆனால் முடிந்துபோன
அவதாரங்கள் மீண்டும்
உருவெடுக்க முடியாதே !
வேறு அவதாரம்தானே
எடுத்தாக வேண்டும்.
உயிர் ஒன்றானாலும்
எடுக்கும் அவதாரங்கள்
வேறுபட்டதே.
அப்படியானால்
அவற்றிற்குள்ள
தொடர்புப் பிணைப்புகள்
அறுந்துபோக வேண்டியவையோ ?
வேஷங்கள் கலையும் நேரம்
உள்ளத்தில் சுமக்கும் பாரம்.
கோபுரத்தின் மேல்
செதுக்கப்பட்ட பொம்மைகள்
அடிக்கடி மாற்றப்படுகின்றன.
அப்படியும் முடியுமா ?
முடிகின்றதே !
நெஞ்ச ஏட்டில்
பதிந்த நாட்களனைத்தும்
இன்பமயமாய் இருந்துவிட்டால்
எந்த நாளைத்தான்
நினைவில்  இருத்துவது ?
அதில் சோக நினைவும்
சிறிது கலந்துவிட்டால்
பிரிவுச் சுமையும்
சேர்ந்துவிட்டால்தான்
இன்பம் சுவை கூடுமென
நினைத்துவிட்டதோ
இந்தக் குரூர விதி. !
வேஷங்கள் கலையும் நேரம் !
இதயங்கள் பிரியும் தூரம் !!
நெஞ்சத்தை அழுத்தும் சோகம். !!!

-- 85 ஆம் வருட டைரி  


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...