எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கண் கெட்ட பிறகு..

அட போங்க பாட்டி நீங்க ஒரு புத்தகம் படிக்க விட  மாட்டீங்க, ஒரு டிவி பார்க்க விடமாட்டீங்க. என்று சின்னப் பிள்ளையில் என் அம்மாவின் பாட்டியிடம்  சலித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏனெனில் எது செய்தாலும் பாட்டி பொஸ்தகமே சும்மா படிக்காதே, டிவிப் பொட்டியவே சும்மா பார்க்காதே. கண்ணு கெட்டுப் போயிடும், சோடாப்புட்டி கண்ணாடிதான் மாட்டப் போறே என சொல்வார். அது உண்மைதான்.

அளவோடு கண்ணை உபயோகப்படுத்தினால் எந்தக் கெடுதலும் வராது, சீக்கிரம் கண்ணாடி போட வேண்டாம் என்பதும் உண்மை.

இன்றைய கம்ப்யூட்டர் யுவன் யுவதிகளைப் பார்த்து நாம் எச்சரிக்கைப் படுத்தினாலும். கை வலிக்குது கண் எரியுது, கழுத்து பிடிச்சுகிடுச்சு என சொல்லும் பிள்ளைகள்.. ஹ்ம்ம் நாம கூட அப்பிடித்தான் கண் கெட்டுப் போனாலும் விடாம ப்லாக், ஃபேஸ்புக், எல்லாம் பார்த்துட்டு புக் படிச்சிட்டு, டிவி பார்த்துட்டு...கண் வலி, எரிச்சல், தண்ணி வடியிறது , அரிப்பு, வீக்கம்னு. ஒரே பேஜாரு. கண்ணச் சுத்திக் கருவளையம் தட்டி பேய்ப்பட பொம்மை மாதிரி முழிச்சிக்கிட்டு.

பவர் க்ளாஸ்ல பவர் ஏறும். ஆனா வெள்ளெழுத்துக் கண்ணாடிலயும் பவர் ஏறுதே.. இது என்ன மாயம்.. :)

கண்ணுக்கு இத்தனை தொல்லை என்றைக்கும் இருந்ததில்லை. இப்ப இருக்குறமாதிரி.. பாவம் கண்.. சூரிய நமஸ்காரம் பண்ண வேண்டாம். பார்த்து நடக்கக் கூட கண் வேணும்.. பார்ப்போம். என்னாகுமோ ஏதாகுமோன்னு.



1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...