எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

மனச் சூல்



மழை மரங்கள்
வெளியே சரம் எறிய
மனமும் சூல் கழட்டி
மகரந்தம் கோர்த்தது.

டெர்ரஸ் பாலைவனங்களில்
மழை விதை பாத்தி கட்டும்.

மாடியோர விளிம்புகளில்
ஊஞ்சலாடும்.

சபைக் கவிஞர்கள்போல்
சிம்மாசனமிட்டு அமரும்

ப்ரிய ராகங்களாய்
உரக்கப் பாடும்.

காதருகே
சந்தோஷம் முணுமுணுக்கும்.

மேகப் பசுக்கள்
மழைப்பால் கறக்கும்.

செடியோ புதிது
புதிதாய்ப் பூவுதிர்க்கும்.

கை பாய வரும்
குழந்தையாய்க்
கலகலக்கும். 

சித்திரையில் பரிசமிட்டு
ஐப்பசியில்
மண் மணக்கும்
.
காற்றோடு கலந்து
திரும்ப வந்து
மனம் மகரந்தம்
கோர்த்து சூல் மூடிக்கொள்ளும்.

-- 85 ஆம் வுடைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...