எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 டிசம்பர், 2015

குட்நைட்



12. 4. 84. இரவு 8.30. “ அம்மாடி பொண்ணுக்குத் ..”

எதையுமே கடவுள் அருள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமோ ?


ஒருத்தன் இன்னொசண்டா இயல்பிலேயே இருக்கலாம். ஆனா இன்னொசண்டா மாற முடியாது.


எப்போதும் லோயர் க்ளாஸ் ஃபாமிலியில இருக்கதுதான் சிறந்தது. மிடில்கிளாஸ்ல் இருக்கிறதுனால எவ்வளவு பிரச்சனை. ?

நினைச்சதைச் சாப்பிட முடியாது. கிடைச்சதை வைச்சிண்டு திருப்திப்பட முடியாது. மனசு பரபரக்கும். அவங்காஞ்சதுமாதிரி அள்ளி அள்ளித் திணிச்சிண்டும் தணியாமல் பேராசைப்படும். அதுக்குத் தீனி போட முடியாது.

பணத்தை இரும்புப் பெட்டில மூட்டை கட்டி  இறுக்கி முடிஞ்சுக்கச் சொல்லும். இஷ்டப்பட்டு ஒரு பத்துக்காசுக்கு கமர்க்கட்டு, பெப்பர்மிண்ட் சாப்பிட முடியாது.

இவ்ளோ பெரிய வீடு இருந்தும் வேளை தவறாம சவரட்சணை கொறையாம வக்கணையா சாப்பாடு இருந்தும் உடுத்தவும் போடவும் எல்லாமிருந்தும் எல்லாத்தையும் காபந்து பண்ணிப் பண்ணி, அது பத்ரமாயிருக்கணுமேன்னு கவலைப்பட்டுண்டு ..”கர்மம்டா சே. ”  என்ன வாழ்க்கை இது. என்னிக்காவது பிச்சிண்டு ஓடிடலாம் போல. !

ஒரு சில சமயம் எனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லே அப்டீன்ற மாதிரித் தோன்றது. ஏன் அப்டி. ?

எனக்கு நிலையா ஒரு எடம் கிடையாது. ஏன் மத்த எல்லாத்திலேயும்தான். ஒரு குறிப்பிட்ட கொள்கைகூட இல்லை. பொட்டு வச்சுக்குறதுல, புடவை செலக்‌ஷன்ல, தலைப்பின்னிக்கிறதுல, எந்தப்பூவை வச்சுக்குங்குறதுல எப்பிடிப் படிக்கணுங்கிறதுல எப்பிடி எழுதணுங்கிறதுல எப்பிடிப் பழகணும், பேசணுங்கிறதுல எதுலயுமே.. ஏனிப்படி ‘ பாரதியின் வேடிக்கை மனிதி ‘ ஆனேன்.

எதிலெயுமே எனக்குப் பிடிப்பு இல்லையோன்னு ஒரு சில சமயம் சந்தேகமாயிடறது. அந்த சமயத்துல ஒண்ணும் பிடிக்கறதுல்ல. என்னயப் பத்தி யார் பேசினாலும் ஏதோ எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லன்ற மாதிரி.. ஒரு சில சமயம் பேசாம இப்டீயே போயிண்டு இருந்தா என்ன.. ? எங்காவது ஊர் ஊரா சாமியாரிணியாட்டம்னு தோண்றது.

எல்லாம் ஒரு க்ஷணம்தான். கைல நழுவுற பிஸிக்ஸ் புக்ல பார்வை பதிஞ்சதும் ஆகா நாம இப்ப பிஸிக்ஸ் ஸம் இல்ல போட்டுண்டு இருந்தோம்னு நெனைப்பு வரது. நெனைப்பு வந்தும் என்ன ப்ரயோசனம். ? ஏன்னா நான் ஒண்ணும் அதுக்கப்புறமும் வெட்டி முறிக்கப் போறதில்ல..! அப்புறம் என்ன விழிப்புணர்ச்சியும் சமாதியும், கற்பனையும் ஒண்ணுதானே.!

’தி.ஜா.’ வோட மரப்பசு ஹீரோயின் மாதிரி ( அச்சு அசல் அவள் மாதிரியே இல்லை) அவளோட ஆசை மாதிரி எனக்கும் எல்லாரோடயும் சிரிக்கணும்போல கைகுலுக்கணும்போல புரிஞ்சுக்கிட்டுப் பேசணும்போல இருக்கு. ! ஜிட்டு ( G.K.) சொல்றதுமாதிரி நம்மை நேசிக்கிற எல்லோரையும் நம்மாலயும் நேசிக்கமுடியும்னு.. ? முடியுமான்னு சிலநேரம் திகைப்பாய்த்தானிருக்கு. எவ்ளவுதான் கிறுக்குனாலும் என்னால ஒரு தீர்மானமான முடிவுக்கு வரமுடியாது. குழப்பிக் குழப்பிக் கடோசீல ஆரம்பிச்ச டாபிக்குக்கே வந்துடுவேன். சரி மணி பத்து . நேரம் ஆகப் போகுதாம். மணிக்கணக்குத் தெரியலைப் போல. சரி குட் நைட் , இதைப் படிக்கிறவங்களுக்கு பேட் நைட்.

பி.கு. ஹாஸ்டலில் எப்படியும் 11அல்லது 12 க்குத்தான் தூங்கப் போவேனா. அதனால இப்போ தூக்கம் வரமாட்டேங்குது. ! சரீ சரீ முடிச்சுட்டேன்…

-- 84 aam varuda diary :)

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...