எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 ஜூலை, 2015

முகநூல் வீடு.

யாரும் பார்த்துட்டாங்களா.

அக்கம்பக்கத்துல யாரும் பார்த்துடலையே..

நம்ம வீட்டுக்குள்ளேயே நாமளே கன்னம் வைக்கிறது திருட்டுத்தனத்தோட சேர்த்தி இல்லியா..

என்னதான் இருந்தாலும் சத்தமில்லாம வீட்டுக்குள்ள நுழைஞ்சு ரவுண்ட் அடிச்சிக்கிட்டு இருக்கது சுவாரசியம்தான்.

வேணுங்கிறது வேண்டாங்கிறதை ஒதுங்க வைக்கலாம். கும்பலோட கும்பலா ஆடாம என்ன நடக்குதுன்னு மட்டும் பார்க்கலாம்.

நம்ம வீட்டுலேருந்து அக்கம் பக்கம் வீட்டை ஒளிஞ்சிருந்து பார்க்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது..

இங்கே பாரு இந்த லல்லி “ மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்னன்னு “ பாட்டு வேற போட்டுருக்கா. கள்ளி ..எப்பிடித்தான் கண்டு பிடிப்பாளோ தெரில..

அங்கே அங்கே சண்டை சச்சரவு ஓடிக்கிட்டுத்தான் இருக்கு. ஐயோ சில இடத்துல வெட்டுக் குத்துக் கூட.. அய இது நம்ம கூட்டுக்காரங்க இல்ல.. வேற யாரோ.. நம்ம நட்பு சொந்தம் ஒறவு மொறைக்கெல்லாம் சண்டைன்னா இன்னான்னே தெரியாது.. ஏன் மொறைக்கக் கூடத் தெரியாது.

அப்போ அப்போ கொஞ்சமே கொஞ்சமா கிண்டல் மட்டும் செய்வாங்க. அதயும் நாம் சுண்டல் போட்டோ போட்டுக்கிட்டே ரசிக்கலாம்.

கொஞ்சநாள் காணாமப் போய்ட்டம்னா தேடுறாங்களா இல்லையான்னு பார்த்தா பூட்டின கதவையே பார்த்துகிட்டு இருக்காங்கன்னு தெரிது.. தபால் பொட்டில தபால் போட்டுட்டு வெயிட்டீஸ் பண்ணிட்டு இருக்காங்க சிலர்..

வூட்டுல நெம்ப வேலை. அதான் இந்த ஒளிஞ்சு பிடிச்சு வெள்ளாட்டு .. அதான் வந்திட்டம்ல திரும்ப பூஸ்ட் குடிச்சிட்டு.. இன்னொரு இன்னிங்க்ஸ் பார்த்துடலாம்...

--- திரும்ப ஃபோட்டோஸ் , கவிதைஸ், மொக்கைஸான்னு நீங்க அலர்றது கேக்குது மக்கா.. ஆனா என்ன பண்றது ஜீனா யஹாங். மர்ணா யஹாங் நு மிஸ்டர் மார்க்குக்கு வாக்குக் கொடுத்துட்டேன்.. சோ... என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரைட்டு... மறுபடியும் அசத்துங்க...

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...