எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 ஜூன், 2015

நண்பனைத் தேடுகின்றேன்.



நண்பனைத் தேடுகின்றேன்.

நண்பனைத் தேடுகின்றேன் – நான்
நண்பனைத் தேடுகின்றேன்.

இருட்டுக்களின் ஈசானிய மூலைகளில்
வெளிச்சங்களின் முனைத் தெறிப்புக்களில்
பொய்மைகளின் அக்கினிக் குளிப்பில்
வாய்மைகளின் புடம்போடுதல்களில்

நண்பனைத் தேடுகின்றேன் – நான்
நண்பனைத் தேடுகின்றேன்

குடிசைகளின் வெள்ளி நிழல்களில்
கொட்டிலின் சாண வாசனைகளில்
வயல்களின் வரப்பு வெளியில்
வரண்டுபோன தரிசு நிலங்களில்

நண்பனைத் தேடுகின்றேன் – நான்
நண்பனைத் தேடுகின்றேன்

பாலைவனப் புதையல்களில்
அழுக்குகளின் நிர்வாணங்களில்
அரையிருட்டு நிழல்களில்
நட்சத்திர முனங்கல்களில்

நண்பனைத் தேடுகின்றேன் – நான்
நண்பனைத் தேடுகின்றேன்

சாலையின் மேடு பள்ளங்களில்
ஓரத்து மரங்களின் நிழல்களில்
ஒதுங்கிக்கிடக்கும் வாய்க்கால்களில்
தடம்பதித்துக் கிடக்கும் குடியானவ வாசங்களில்
மூச்சிரைக்க ஓடுகின்றேன்
நண்பனைத் தேடுகின்றேன்.

-- 83 ஆம் வருட டைரி 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரியும் மிகவும் சிந்திக்க வைக்கிறது சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...