எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 ஏப்ரல், 2015

எரிச்சல் 2.



எரிச்சல் 2.

இருட்டு
வெள்ளை உடைப்பிசாசுகளைக்
கண்டு பயந்து ஓடும்.

கைகள் கன்னம் அரிக்கக்
கன்னம் கை முறித்துப் போடும்.

ஆற்றுமணல் நீருறிஞ்சிப்
பொட்டல் வேஷமிடும்

மனப்புத்தகங்கள் ஏடுகிழித்து
எரிந்து போகும்.

அக்கினியை அவசரமாய்
விழுங்கும்
வெள்ளை அனுமான்கள்.
( மெழுகுவர்த்திகள் )

 * * * *
பிரித்துவிட்ட
இடங்களிலெல்லாம்
இறுக்கமாய்ச் சுருக்கிக்கொள்ளும்
வெள்ளை முடிச்சுகள்.

கட்டிடங்கள்
மஞ்சள் வெளிச்சங்களில்
இருட்டு நடனமாடி
முட்டிக்கொள்ளும்.

கூட்டிலிருந்து
தவறி விழுந்த குருவி
பதைபதைக்கும்

சில மனசுத் தொப்பைகள்
விகாரங்கள் வெளிச்சிதறும்.

மெழுகுவர்த்திகள்
நெருப்பு வாயால்
கத்திக் கத்திக்
கறுப்பாய்ப் போகும்.

-- 1983 ஆம் வருட டைரியிலிருந்து. 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

யம்மாடி...! இன்னும் இருக்கா...?

Thenammai Lakshmanan சொன்னது…

சரி ஆயிடுச்சு சகோ. இது கல்லூரி டைரி :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...