எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 மார்ச், 2015

காக்கைகள்.



காக்கைகள்
சோற்றுக்காய்க்
கூரை கொத்தும்
அழுக்குத் தின்று
அசிங்கம் அடக்கிய
காக்கைகள்

ஆங்காரமாய்ச்
சிறகடித்து
முகம் குதறிப்
புண்ணாக்கும் காக்கைகள்,

கறுப்பாய் வெளுப்பாய்
மாநிறமாய்
எல்லா நிறத்திலும்
எத்தனை காக்கைகள்.

நெருஞ்சி தள்ளி
முட்டவிழித்துக்
கோரமாய்ப் பார்க்கும்
காக்கைகள்.

இரகசியம் புதைத்து
கழுத்துப்பிடறியை
மெல்லச் சிலிர்த்து
அப்பாவியாய்ப் பார்க்கும்
கூர்நகம் பாதுகாக்கும்
காக்கைகள்.

அழுகல் மாமிசம்
அள்ளி அடைத்து
வாய்க்குக் கைகாட்டும்
இராட்சதக் காக்கைகள்.

மூக்கைத் தீட்டித் தீட்டி
மீனை உதறிப் போட
மௌனம் அடைகாத்த
மலட்டுக் காக்கைகள்
இவை
மனிதக் காக்கைகள்.

-- 83 ஆம் வருட டைரி 

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லா சொன்னீங்க...

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...