எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 மார்ச், 2015

நான்



நான்
======
குப்பை பொறுக்கி
உலகம் கல்லாய்
இரும்பாய்க் கனத்துப் போகும்

இதுவோ
தூசி வழித்துச்
சேகரம் பண்ணும்.
வெறுத்து ஒதுக்க
முன்னுச்சியாய்க் கூத்தாடும்

குப்பை பொறுக்கி 
மூட்டை வழியவிட்டு
வார்த்தை தின்னும்.
காலில் சங்கிலி மாட்டி
ரோட்டோர மூத்திர மண்ணில்
புரளும்

கல்லடி வாங்கிக்
காற்றைச் சபிக்கும்.
கதறல்கள் கிழிக்கும்

எல்லாம் மறந்து
பல்லிளிக்கும்
குப்பை பொறுக்கி.

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனம் அப்படி இருக்கக் கூடாதே...!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...