எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 நவம்பர், 2014

மீண்டும்



மீண்டும்
நானுனக்கு எழுதுகிறேன்.
ஏனெனில் நான் என்னுடனே
போராடிக்கொண்டிருக்கிறேன்.
நெரிசல்களுக்குள்
வார்த்தை அரைத்தல்களுக்குள்
துணுக்குகளாய்க் கிடக்கும்
என்னை – ’நானை.’ த்
தேடிக்கொண்டிருக்கிறேன்
மீட்டுக்கொள்ளத் தவிக்கிறேன்.
உன் உபதேசங்கள் கிணற்றடிவாரங்களுக்குள்
சொரிந்து கழுவும் அழுக்காய்க் கரைந்தன.
உப்புத்தாள்களாய் வேதனைகள் அரிக்க
மரப்பலகையாய் கற்சுவராய்
நான்..
இந்த மாற்றம்
நிகழ்ந்தது எப்போது. ?

-- 84 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...