எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 செப்டம்பர், 2014

அழகின் சிரிப்பு

ஆசு கவிகளுக்கு இது
அழகான தலைப்பு

நேச உள்ளங்களுக்கு இது
அவஸ்தைச் சிரிப்பு

ஈழத்தில் நம் இதயங்கள்
துண்டாடப்படும்போது
இது அழகின் சிரிப்பல்ல

வேஷ மனிதர்கள் உறவாடும்போது
இது மோசச் சிரிப்பு .

இளங்குருத்துக்கள்
கருகிக்கிடக்கும்போது
இளஞ் சிரிப்பெங்கே பூக்கும்

வாழைக் குருத்துக்கள்
குருதி கொட்டும்போது
வளமான சிரிப்பா பூக்கும்

தாழை மடல்கள்
வேருடன் சாயும்போது
இது அக்கினிச் சிரிப்பு

காளைச் செல்வங்கள்
தடுமாறும்போது
தடம் மாறும்போது
இது நாசச் சிரிப்பு.

-- 82 ஆம் வருட டைரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...