எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

பழைய பத்து.



சூரியன் சுட்டெரித்தது கூட 
எனக்கு உறைக்கவில்லை. 
ஏனெனில் நம்பிக்கை விசுவாசமற்ற 
உன் வார்த்தைகள் முன் 
இந்தச் சூரியத்தகிப்பு எம்மாத்திரம்..?
0              0             0
பெண்களை எதற்காய் 
புஷ்பங்களோடு ஒப்பிடுகிறார்கள் என 
எனக்குப் புரிந்துவிட்டது. 
ஏனெனில் அவர்கள் சீக்கிரமே மலர்ந்து 
சீக்கிரமே வாடிவிடுகின்றார்கள்.
0              0               0
மலைகள் வெட்கமில்லாமல் 
தான் தோன்றித்தனமாக 
வளைந்து நெளிந்து 
மல்லாந்து உறங்குகின்றனவா.?
0              0               0
மரங்கள் கூச்சமில்லாமல் 
எங்குபார்த்தாலும் கைகளை நீட்டி 
யாசகம் கேட்கின்றதா. ?
0              0               0
தெருப்புழுதிப் புதுக்கவிதைதளின் 
தெருக்கூத்தைக் கண்டுதான் 
பதறிப்போய், கதறிப்போய்த் 
தற்கொலை செய்து கொண்டாயோ 
தன்மானக் கவிஞனே..!
0               0              0
மௌனம்தான் உன் தாய்மொழியென்றால் 
எப்போதும் அதையே 
பேசிகொண்டிருக்க வேண்டுமா அன்பே..?
0               0              0
மேற்பாரம் ஏற்றிக் 
கீழ்பாரம் இறக்கும் வேலையைத்தான் 
மனிதன் உருப்படியாகச் செய்கிறான்.
0                0              0
என்னை வெறுப்பேற்றும் இக்காலங்கள் 
உனக்கு வசந்த காலங்களாகத் தோன்றலாம். 
இது காலத்தின் குற்றமல்ல. சகியே. 
கண்களின் குற்றம்.
0                0               0
என் ஜன்னல்கள் 
விழியை மறந்துவிட்டன. 
தோழீ. 
விழித்தாலும் ஒளிர மறுத்துவிட்டன.
0                0               0
ஆழ்கடலில் தத்தளித்து 
அழகிய முத்தினை 
முக்குளித்து எடுத்து வருகையில் 
மூச்சுக்குப் போராட்டம். 
கைகொடுப்பாய் என நினைத்த வேளையில் 
ஏனிந்த சிறையெடுப்பு.. 
ஓ 
உன் கரங்களால் சிறைப்பட்டதால் 
பெருமையின் பூரிப்பு.
0                0               0 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...