எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 ஜனவரி, 2014

விளையாட்டு

ஒரு கருமேகம்
கொதித்துக் கிடக்கும் பூமியில்
நிரப்பிச் செல்லும் குளுமை
பூக்களைச் சிரிக்கவைத்துக்
காற்றைச் சிலிர்க்க வைக்கிறது,
முகம் கழுவி எழும் சூரியனையும்
சுறுசுறுப்பாக்குகிறது.
அலையும் பகல் மரக்கூந்தல்களில்
தங்கித் துயில்கிறது.
ஏகாந்தமாய்க் குயிலோடு
கூதலாய்க் கூவிச் செல்கிறது காற்று.
செய்வதற்கொன்றுமில்லை.,
தினம் தினம் அடுக்கினாலும்
விளையாட்டுப் பொருளாய்
இறைந்து கிடக்கும் இவற்றில்
மூழ்கிக் கிடப்பதைத் தவிர..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வாழ்த்துக்கள்...

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோ..
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி பாண்டியன் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...