எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 ஜனவரி, 2014

பற்றற்றுப் பற்று

பிரம்ம ராட்சசர், கின்னர்,
கந்தர்வர், கிம்புருட
ர்,
பூத கணங்கள்,
யானைத் துதிக்கை யாளி,
சிம்மம், நந்தி ,
எட்டுக்கரம் விரித்தணைக்கும் காளி,
நாகம் சுமந்து இசை நடனமிடும் கூத்தன்
நிரம்பித் திரிகிறார்கள் கனவெங்கும்.

கொட்டும் மழையிலும் வெய்யிலிலும்
குதிரைகள் புடை சூழக்
காத்து ரட்சிக்கிறார்கள்
கருப்பரும் ஐய்யனாரும்.
மயானச் சாம்பலிலிருந்து
புறப்பட்டெழும் அங்காளம்மன்
வேட்டைக்குப் போகும் சுடலை மாடன்,
உணர்த்துகிறார்கள் நிலையாமையின் இருப்பை.

நின்ற கோலம்
நடனக் கோலம்
இருந்த கோலம்
கிடந்த கோலம் எல்லாம்
உலாவரும் கோலமாய்
உழம்பிக் கிடக்கிறது ஞாபகம்.
எண்ணங்களற்றும் இருப்பற்றும்
பற்றற்றும் பற்றோடு திரும்புகிறது மீளவும்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// உணர்த்துகிறார்கள் நிலையாமையின் இருப்பை... //

அருமை சகோதரி...

வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...