எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

இணையின் துணை

ஒவ்வொரு நாளையும்
துகிலுரிக்கிறது நாட்காட்டி.
உரிக்க உரிக்க வெங்காயம் போல
ஒன்றுமில்லாமல் போகிறது வாழ்க்கை.
ஒரு ரயில் பிரயாணத்தில்
சந்திப்பதாய் நகர்கிறது இணையின் துணை.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நோக்கிப்
பயணிக்கிறது புகையிரதம்.
விடியத் துவங்குகிறது
சந்தியாகாலத்திலிருந்து தொடர்ந்த இருட்டு.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோ...

வாழ்த்துக்கள்...

vimalanperali சொன்னது…

உரிக்கும் வெங்காய்ம்போல் அல்ல,
அதை விளையச்செய்கிற நிலமாய்த்தான்
இருக்கிறது வாழ்க்கை.
இலக்கு நோக்கி பயணிக்கிற புகையிரதமும்,
விடியத்துவங்குகிற இருட்டுமே அதற்கு உதாரணங்களாய்.வாழ்த்துக்கள்/

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி விமலன்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...