எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 ஜூன், 2013

பிரபஞ்சப்பெண்.

சூரியனுக்குப் பின்
அந்திமந்தாரையோடு
குளிரப்பூக்கும் அவளை
இரவென்கிறார்கள்.

சூரிய ஒளியேற்றிப்
பயணித்து வரும்
பால்வண்ணக்காரனை
நிலவென்கிறார்கள்.

அவன் அவளைக்
கடந்துசெல்லும் போது
உராய்ந்து தெறிகின்றன
உடலெங்கும் நட்சத்திரங்கள்.

அவன் திரும்பும்வரை
சிதறும் நட்சத்திரங்களை
சேமித்துக் கொண்டிருக்கிறாள்
பெருகும் இன்பப் பால் வீதியாய்..

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிதறும் நட்சத்திரங்களை ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...