எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஜூன், 2013

சோக புத்தன்..

இனத்தைப் புதைக்கும்
இடுகாடானது இலங்கை.

புதைகுழிகளான கருப்பை சுமந்து.
பிணங்களைச் சூல் கொண்டிருக்கிறாள்
பிரசவிக்க இயலாத தமிழ்மகள்.

வேண்டாத கருக்களாய்
வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது
மண்ணுக்குள் மனிதங்கள்.

தப்பித்த கருக்களுக்குக் கண்ணிவெடி

பற்களைப் பேழையில்
பாதுகாக்கும் தேசம்
பால்சிசுக்களை மென்றுதின்னும்
பாவிகளால் நிறைந்திருக்கிறது.

பச்சை ரத்தத்தைக்
கழுவிக் கொள்கிறது
இந்துமகா சமுத்திரத்தை
செங்கடலாய் மாற்ற எண்ணி.

தன் ரத்தம் தோய்ந்த
கோரப்பல்லைக் காணத் துக்கித்து
தவறான இடத்தில்
தவறவிட்டதற்காய்
கண்மூடி வருத்தத்தில் புத்தன்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கொடூரம்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபால்..:(

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...