எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 மே, 2013

ஓடும் ஒளியும்.

ஓடுகளைச் சுமப்பதில்
பிரியம் உனக்கு..
ஒளித்துவைக்கிறேன்
நீ வெளிவந்த ஓடுகளை..
உன் புன்னகையின் ஒளியில்
பூக்கிறது சூரியன்..
கலகலக்கிறது நதி
சலசலக்கிறது பறவை.
ஒளியெடுக்கிறது நிலா..
கண்கூசத் திரும்பத்
தேடுகிறாய் உனதான ஓடை.
ஒளித்துவைத்த நானே
உன் பார்வைக்கெட்டாது
கிட்டிவிடக்கூடாதென
ஒளியத் துவங்குகிறேன்
நீ ஒளிர..

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// ஒளியத் துவங்குகிறேன்
நீ ஒளிர.. ///

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...