எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 ஏப்ரல், 2013

எழுத்தாளர்கள்.

31.12.1986 -- 6.10 PM

************************************
அந்த எழுத்தாளர்கள்
மரித்துப் போனார்கள்.

துஷ்ட தேவதையின்
ஆவாகனங்களுக்கு மத்தியில்
வாழ்நாள் முழுக்க
வார்த்தை விஷத்தை சுவாசித்தே
மரித்தார்கள். மரித்தார்கள்.

காற்றைத் தேடியே
களைத்துப் போனார்கள்.

ராட்சசத் தாவரங்களுக்குள்
சிக்கிக் கொண்ட சின்னப் பூக்கள்,
முட்களும் மென்மையும் களையப்பட்டு..

சுத்தமான நீராய்த்தான்
இருந்தார்கள் அவர்கள்.
ஆனால் தூசிப் போர்வை இடப்பட்டு
அழுகல் இலைகளால்
கலக்கப்பட்டார்கள்.

மரித்துப் போனார்கள்
அந்த எழுத்தாளர்கள்
சுட்ட உடல்களாய்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// வாழ்நாள் முழுக்க
வார்த்தை விஷத்தை சுவாசித்தே///

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...