எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 மார்ச், 2013

நீர்க்கங்கு..

மீன் செதிலாய் 
மினுமினுக்கிறது நதி
துடுப்புத் தூரிகையில் 

மீன்பிடிக்கும் ஓவியன்
துணையோடலைந்து 

அணையை அளக்கிறது பறவை.
நிழற்சாம்பல் பூக்க 

நீர்க்கங்கை அடக்குகிறது அணை..
பச்சைப் புன்னகையில் 

குழலசைத்துக் கிடக்கின்றன மரங்கள்..
வெய்யில் வலை விரித்து 

கணங்களை விழுங்கிக் 
கடக்கிறது காலம்..:)

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...