எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 மார்ச், 2013

கரண்ட் கட்

கரண்ட் கட்.:-
**********************

மின்சாரமற்ற ஒரு நாள்
என்னைப் புதுப்பித்துக்
கொண்டிருந்தது.

அவதி அவதியாய்க்
குளித்து அள்ளியுண்டு
கம்ப்யூட்டரின் முன்
குத்தவைக்கும் அவஸ்தையில்
இருந்து விடுபட்டிருந்தேன்.

முன்னைப் போல
அலமாரியைத் திறந்து
ஆராய்ந்து கொண்டிருந்தேன்
எதை உடுப்பதென.

கடலைமாவும்., பாலேடும்
எலுமிச்சையும் தேய்த்து
வெளுப்பதற்கான
முஸ்தீபுகளில் இறங்கினேன்.

எதெதையோ நேரம் கெட்டு
கெட்டுப் போய் உண்ணும்
நிலையிலிருந்து

சூடான புளிக்குழம்பை
சுடுசோற்றில் பிசைந்து
கவளம் கவளமாய் ரசித்துண்டேன்.

குழந்தைகளின் பழைய
ஓவிய நோட்டுக்களைக்
குறுக்கெழுத்துப் புதிர்போல
ஆராய்ந்து மகிழ்ந்தேன்.

வெள்ளையாய் க்ரீம் பூசி
நகச்சித்திரம் வரைந்து
நண்பிகளுடன் அளவளாவித்
திரும்பினேன் செல்லிலிருந்து.

என்ன உடுத்தினேன்
என்ன உண்டேன்
என்ன பேசினேன்
என்பதெல்லாம் மறந்து
காதலிக்ககத் துவங்கினேன்
கரண்டு வந்தவுடன்
ஒளிபெற்ற மானிட்டரை.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...