எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 மார்ச், 2013

ப்ரம்ம பதம்..

ஏணிப்படிகளை எண்ணி எண்ணி ஏறி
பாம்புக் கடி கீழிறக்க
ஏறவும் இறங்கவுமாய் அல்லல்பட்டு
முக்கி முனகி மூச்சுமுட்டி
பரமபதத்தை எட்டிய கிழவியை
தொண்ணூற்றெட்டில்
பெருங்கொண்ட பாம்புகடித்து
இரண்டில் இறக்கிவிட
குட்டிக் குழந்தையாகி
வீறிட்டலறினாள்..
“ அடப்பாவி
திரும்பவும் முதலேருந்தா..”

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்.:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...