எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 பிப்ரவரி, 2013

வெள்ளியிலிருந்து தங்கத்துக்கு..

சாம்பல் பூக்க விழித்திடும்
வயல்வெளி மனிதர்களைத்
தங்கப்புடமிடுகிறது வெய்யில்.
அதிகப் புடத்தால்
கறுப்பைப் பூசிய
இரும்பு மனிதர்கள்
இரவுப் பாதரசத்தில் மூழ்கி
வெளுத்துக் கிடக்கிறார்கள்.
விலைவாசி அறியாது
வெள்ளியிலிருந்து
தங்கத்துக்கு மாற்றும்
ரசவாத வினையில்
தோற்றுக் கொண்டிருக்கிறது
தினப்படி வெய்யில்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...