எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

நட்பூங்கொத்து

நட்பை பூங்கொத்தாய் ஒளித்து
மறைத்து முன்போகிறாய்.
ஓரத்து இதழ்களையும்
சிந்தும் மகரந்தங்களையும்
சிதறும் தேன் துளிகளையும்
கை வழி சிதறிய
நீர்ச் சொட்டுக்களையும் பிடித்துத்
தேனீயாய்ப் பின் தொடர்கிறேன்
முழுவதும் காண..
லாவகமாய் நீ நகர நகர
இழுக்கிறது என்னை
நட்பின் நறுமணமும்
எப்போது தரப் போகிறாய்
என்ற எண்ணமும்.

4 கருத்துகள்:

semmalai akash சொன்னது…

லாவகமாய் நீ நகர நகர
இழுக்கிறது என்னை
நட்பின் நறுமணமும்
எப்போது தரப் போகிறாய்
என்ற எண்ணமும்./////////

சூப்பர் அருமையான வரிகள்.

A. Manavalan சொன்னது…

ஓரத்து இதழ்களையும்
சிந்தும் மகரந்தங்களையும்
சிதறும் தேன் துளிகளையும்
கை வழி சிதறிய
நீர்ச் சொட்டுக்களையும் பிடித்துத்
தேனீயாய்ப் பின் தொடர்கிறேன்

Thenee sila nerangalil kottomame athanaalo ?

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செம்மலை ஆகாஷ்

நன்றி மணவாளன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...