எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 நவம்பர், 2012

அபிப்ராயங்கள்

அபிப்ராயங்கள்:-
*********************
கால்களற்றவன்
கைச்சக்கரங்களால்
கடந்துபோய்க்கொண்டிருக்கிறான்.


கண்கள்வழி
கருணை கசிந்துவிடாதிருக்கவும்
புன்முறுவல் பொங்கிவிடாதிருக்கவும்

யத்தனிக்கிறேன்.

கடுமையான பாவனைகளால்
கல்லாகிறது முகம்.,
அவனை எந்த விதத்திலும்
காயப்படுத்தாத சந்தோஷத்துடன்.

யதார்த்தமாய்க் கடக்கும் அவன்
யோசித்தபடி செல்கிறான்.,
முறுவல்கள்கூட அற்ற முகம்..
பாவம் என்ன பிரச்சனையோ..

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சரண்சக்தி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...